Published : 28 Feb 2015 11:38 AM
Last Updated : 28 Feb 2015 11:38 AM
மத்திய அரசு ஐம்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக, பொது பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
2015-16 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.
ஜேட்லி தனது பட்ஜெட் உரையில், "மத்திய அரசு ஐம்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவை:
1. விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
2. கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
3. உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது.
4. நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும்.
5. நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி நிலை:
இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மொத்த பண வீக்கம், நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டி மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16 நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கு 8% முதல் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இலக்க ஜிடிபி அடைய வேண்டும் என்பதே எதிர்காலத் திட்டம். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT