Published : 17 Sep 2016 03:08 PM
Last Updated : 17 Sep 2016 03:08 PM
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 14 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லச்சிடா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி இயற்கை உபாதையின் காரணமாக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
அப்போது அந்த சிறுமி அழுகின்ற சத்தத்தை கேட்ட கிராமவாசிகள் அந்த இரு இளைஞர்களிடமிருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அந்த சிறுமி உடலில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்தார்.
இதனால் இந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் மோகன் குமார், சோனு சிங் என்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT