டெல்லி பேக்கரியில் வெடிப்புச் சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு

டெல்லி பேக்கரியில் வெடிப்புச் சம்பவம்:  3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

டெல்லியில் பேக்கிரி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “டெல்லியின் குரெஜி பகுதியில் பேக்கரி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் ஊழியர்கள் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இந்த விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகேவுள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in