லாலுவுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் தண்டனை விபரங்கள்

லாலுவுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் தண்டனை விபரங்கள்
Updated on
1 min read

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் நாளை மறுநாள் ( அக்டோபர் 3ம் தேதி) அறிவிக்கப்படுகிறது. தண்டனை விபரங்களை லாலு சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிறையில் (z)இசட் பிரிவு பாதுகாப்பு கேட்ட லாலுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in