Last Updated : 05 Feb, 2017 12:36 PM

 

Published : 05 Feb 2017 12:36 PM
Last Updated : 05 Feb 2017 12:36 PM

கோத்ரா வழக்கில் 26 பேர் விடுதலை

கடந்த 2002, பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு ரயில் கொளுத்தப்பட்டது. அதில் பயணித்த 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.

இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து, குஜராத் முழுவதும் பயங்கர வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை காந்திநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட் டது. தீர்ப்பை வாசித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பி.டி.படேல், ‘‘குற்றவாளிகளுக்கு எதிராக வலு வான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட வில்லை. மேலும் இவ்வழக்கில் சாட்சியம் அளித்த பலர், பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே அவர்கள் 26 பேரும் விடுவிக்கப் படுகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x