Published : 14 Apr 2014 11:47 AM
Last Updated : 14 Apr 2014 11:47 AM

காஷ்மீரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கிய தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அகமதுநகரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கியுள்ள இரண்டு தீவிரவாதிகளை பிடிக்க போலீஸார் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் அகமதுநகரில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். குடியிருப்புப் பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.

வீட்டில் புகுந்த தீவிரவாதிகள், வீட்டின் உரிமையாளரை பணயக்கைதியாக பிடித்துவைத்தனர். பல மணி நேரத்திற்குப் பின்னர் பணயக்கைதியாக பிடித்துவைக்கப்பட்ட வீட்டு உரிமையாளரின் மனைவியை மட்டும் வெளியே அனுப்பினர். இன்று காலையில் வீட்டின் உரிமையாளரையும் விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தினர். இதற்கு தீவிரவாதிகள் ஒப்புக்கொள்ளாததால் அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x