Published : 15 Oct 2014 10:45 AM
Last Updated : 15 Oct 2014 10:45 AM
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயின் சுயசரிதை I AM MALALA ( ஐ ஆம் மலாலா) தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட 4 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகம் அக்ருதி பதிப்பகத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது.
மற்ற மொழிகளிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண் குழந்தைகள் கல்வியுரிமைக்காக மலாலாவின் போராட்டமும், அதற்காக அவர் தலிபான்களால் தாக்கப்பட்டதும், அதிலிருந்து மீண்டெழுந்து தொடர்ந்து போராடுவதும் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஐ.நா பொது அவையில் மலாலா உரையாற்றிய பின்னர் 'மலாலா தினம்' குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாலாவின் புத்தகம் உலக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT