Published : 01 Jun 2017 09:28 AM
Last Updated : 01 Jun 2017 09:28 AM
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம், இப்ரஹிம் பட்டினம் பகுதியைச் சேர்ந்த, ஒரே குடும்பத் தினர் 15 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன் சொகுசு மினி வேனில் திருமலை வந்தனர். இவர்கள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 3 மணியள வில் கடப்பா மாவட்டம், கானா கூடூரு எனுமிடத்தில் வந்தபோது, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மணல் டிராக்டர் மீது வேன் மோதியது.
இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் வேனில் இருந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கர்னூல் மாவட்டம் சாகலமர்ரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT