Published : 31 Aug 2016 10:41 AM
Last Updated : 31 Aug 2016 10:41 AM
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்), பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி., எஸ்.யு.சி.ஐ. (சி) ஆகிய 6 இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
அந்த கட்சிகளின் தலைவர்கள் லக்னோவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டியளித்தனர். அவர் கள் கூறியபோது, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை 6 கட்சிகளும் இணைந்து எதிர் கொள்ளும் என்று தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கிரிஷ் கூறியபோது, வரும் நவம்பர் 9-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் லக்னோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT