Published : 21 Oct 2014 04:04 PM
Last Updated : 21 Oct 2014 04:04 PM

ஃபிளிப்கார்ட் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறவில்லை: நிர்மலா சீதாராமன்

ஃபிளிப்கார்ட் ஆன்லைன் தள்ளுபடி விற்பனை குறித்து விசாரணை நடத்த இருப்பதாக நான் கூறவில்லை என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஃபிளிப்கார்ட் அறிவித்த 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விளம்பரத்தால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு புகார் அளித்தனர்.

இதனை அடுத்து ஃபிளிப்கார்ட் விவகாரத்தை முன்னிறுத்தி வர்த்தக கொள்கைகள் ரீதியிலான மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னர் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது கருத்து தவறுதாலாக திணித்து கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இது போன்ற செய்திகள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பது தெரியவில்லை. ஃபிளிப்கார்ட் நிறுவன விளம்பரத்தை நம்பி பலர் ஏமாற்றம் அடைந்ததாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது குறித்து பல புகார்கள் வந்திருப்பதாகவும், இது குறித்து வர்த்தக கொள்கைகள் தொடர்பாக கொண்டுவரக் கூடிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசு கவனித்து வருகிறது என்றே நான் கூறினேன்.

ஆனால், நான் பேசிய 3 வரிகளில் 30 லட்ச விளக்கங்கள் திணிக்கப்பட்டு செய்தி வெளியாகி உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x