Last Updated : 07 Oct, 2014 09:30 AM

 

Published : 07 Oct 2014 09:30 AM
Last Updated : 07 Oct 2014 09:30 AM

விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் கட்கரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் பிரச்சார பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித் துள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிரத்தின் லத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, வாக்களிக்க யார் பணம் அளித்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் விருப்பம்போல் வாக்களியுங்கள் என்று கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வரும் புதன் கிழமைக்குள் அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில் தேர்தல் ஆணையம் தன்னிச்சை யாக முடிவெடுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x