முன்னாள் நீதிபதி லீலா சேத் காலமானார்

முன்னாள் நீதிபதி லீலா சேத் காலமானார்
Updated on
1 min read

உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி லீலா சேத் (86) டெல்லியில் நேற்று காலமானார்.

கடந்த 1930-ல் லக்னோவில் பிறந்த அவர் சட்டம் பயின்றார். வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

கடந்த 1991-ல் அதே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் நேற்று அவர் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in