Published : 12 Mar 2017 10:37 AM
Last Updated : 12 Mar 2017 10:37 AM
உ.பி. தேர்தல் முடிவுகள் மன வேதனை அளிக்கிறது. அங்கு கட்சியில் அடிப்படை மறுகட்ட மைப்பு தேவைப்படுகிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்கி கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, “உ.பி.யில் மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இது மன வேதனை அளிக்கிறது. உ.பி. காங்கிரஸ் கட்சியில் அடிப்படை மறுகட்டமைப்பு குறித்த சிந்தனை தேவைப்படுகிறது. இந்த சிந்தனை உத்தியில் கடினமாக முடிவுகளை கொண்டதாக இருக்கும்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறும்போது, “உ.பி., உத்தராகண்ட் தேர்தல் தோல்விக் கான காரணங்களை ஆய்வு செய் வோம். மக்களை காப்பதிலும் கட்சியை வலுப்படுத்துவதிலும் எங் களை மறுஅர்ப்பணிப்பு செய்து கொள்வோம்.
உ.பி., உத்தராகண்ட் தேர்தல் வெற்றிக்காக பாஜக மற்றும் பிரதமர் மோடியை வாழ்த்துகிறோம். இரு மாநில மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியால் காங்கிரஸ் கர்வம் கொள்வதில்லை. தோல்வியில் துவண்டுபோவதும் இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று ஓய்வின்றி பேசிய வர்களுக்கும் இத்தேர்தல் பாடம் கற்பித்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT