Published : 05 Jul 2016 11:05 AM
Last Updated : 05 Jul 2016 11:05 AM

மாற்றுத் திறனாளிக்கு 3% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிபதிகள் செலமேஸ்வர், அபய் மனோகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-ல் அமலுக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் குரூப் சி, குரூப் டி ஆகிய பணியிடங்களில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை குரூப் ஏ, குரூப் பி ஆகிய பணியிடங்களுக்கும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

எந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்தாலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனா ளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x