பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி

பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி
Updated on
1 min read

நிதியமைச்சர் அருண்ஜேட்லி பாதுகாப்புத் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வராக பதவியேற்பதால் தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியை திங்கள்கிழமை காலை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சகம் கூடுதல் பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியன.

இந்த நிலையில் மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமை) ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சகம், கூடுதல் பொறுப்பாக அருண்ஜேட்லிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குடியரசு மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறை அமைச்சராக இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in