Published : 25 Apr 2017 09:36 AM
Last Updated : 25 Apr 2017 09:36 AM
பசுக்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி அகில பாரத கிருஷி கோசேவா சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: பசுக்களின் வயது, உயரம், நிறம், கொம்புகளின் வகை, வால் நீளம் ஆகியவற்றை பதிவு செய்து அவற்றுக்குச் சிறப்பு எண் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இதனை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்த நடவடிக்கை மூலம் பசுக்கள் கடத்தலைத் தடுக்க முடியும்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT