Published : 22 Nov 2013 11:48 AM
Last Updated : 22 Nov 2013 11:48 AM

ம.பி. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி உறுதி: சிவராஜ்சிங் சவுகான்

மத்தியப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் ம.பி.யில் வரும் 27-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்: கடந்த 10 ஆண்டுகளில் ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. இதனை தேர்தல் கருத்துக் கணிப்பு அடிப்படையில் நான் சொல்லவில்லை, மக்கள் பா.ஜ.க. மீது வைத்துள்ள அன்பின் அடிப்படையில் சொல்கிறேன், என்றார்.

கடந்த 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பா.ஜ.க. 230 தொகுதிகளில் 143 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x