Published : 09 Oct 2014 10:15 AM
Last Updated : 09 Oct 2014 10:15 AM

மங்கள்யான் அனுப்பிய புதிய புகைப்படம்

மங்கள்யான் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப் படத்தை இஸ்ரோ வெளியிட் டுள்ளது.

மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, விண்கலத்திலுள்ள கேமரா மூலம் செவ்வாய் கிரகத்தை பல்வேறு கோணங்களில் விஞ்ஞானி கள் புகைப்படம் எடுத்து, அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தை 66,543 கி.மீ. தூரத்தில் இருந்து மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா மூலம் எடுத்த புகைப்படம் ஒன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இப்போது வெளி யிட்டுள்ளது. செவ்வாயின் மேற்பரப் பில் மேகமூட்டம் உருவாகி யிருப்பதை இந்த புகைப்படம் காட்டியுள்ளது.

இந்த மேகமூட்டத்திற்கு தெற்கே காணப்படும் கருமையான பகுதிதான், ‘எளிசியம்’ என்ற எரிமலைப் போன்ற பகுதி என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மங்கள்யான், செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்த அடுத்த நாளிலிருந்து புகைப் படங்களை அனுப்பத் தொடங்கி விட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x