Published : 13 Sep 2016 02:53 PM
Last Updated : 13 Sep 2016 02:53 PM

கர்நாடகம்: கருணாநிதி மகள் செல்வியின் எஸ்டேட்டுக்கு பலத்த பாதுகாப்பு

பெங்களூர் புறநகர்ப்பகுதியில் வாதெராஹல்லியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமான எஸ்டேட்டுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமதா சைனிக் தல் என்ற அமைப்பு ஆர்பாட்டத்தில் குதித்ததையடுத்து கனகபுரா தாலுகாவின் வாதெராஹல்லியில் உள்ள செல்வியின் எஸ்டேட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னடர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறி சமதா சைனிக் தல் அமைப்பினர் எஸ்டேட் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள கன்னட மாநிலத்தவர்களின் சொத்துகளையும் உயிர்களையும் பாதுகாக்க தமிழக அரசுக்கு திமுக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.

இவர்கள் எஸ்டேட்டிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததையடுத்து போலீஸார் இவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து “24 மணிநேர பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x