Published : 18 Aug 2016 07:54 AM
Last Updated : 18 Aug 2016 07:54 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது மற்றும் அவரது தாயை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு மே 28-ம் தேதி, பீட் மாவட்டம் கோரம்பா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த இருவர், அங்கிருந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததுடன் அவரையும் அவரது தாயையும் கழுத்தை நெறித்து கொன்றனர்.
இது தொடர்பாக மஜல்கான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணா ராம்ராவ் ரிட்டி மற்றும் அச்யுத் பாபா சுஞ்சி ஆகிய 2 பேருக்கும் நீதிபதி ஆர்.வி.மோரல் மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT