Last Updated : 04 Oct, 2014 07:04 PM

 

Published : 04 Oct 2014 07:04 PM
Last Updated : 04 Oct 2014 07:04 PM

அமித் ஷாவுக்கு எதிராக புகார் பதிவு செய்த போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கையை தயார் செய்த போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உ.பி. மாநில பாஜக பொறுப்பாளராக இருந்த அமித் ஷா மீது வெறுப்பை உமிழும் வகையில் பேசியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அமித் ஷா மீது போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 11-ம் தேதி அமித் ஷா மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்த கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் சுந்தர் லால் அதை போலீஸாருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 173 (2)-க்கு உட்பட்டு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படவில்லை என மாஜிஸ்திரேட் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x