ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருப்பு
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் 15 மணி நேரத்துக்கும் அதிகமாகக் காத்திருந்தனர்.

திருப்பதி எழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. விடுமுறை தினம் என்பதாலும், சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று ஊர் திரும்பும் ஐயப்ப பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்வதாலும் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் 27 அறைகள் நிரம்பி தர்ம தரிசனம் செய்ய 15 மணி நேரம் ஆனது.

இதேபோன்று மலைவழிப்பாதை வழியாக சென்ற பக்தர்கள் திவ்ய தரிசனம் செய்ய 10 மணி நேரமும் ரூ.300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்ய 6 மணி நேரமும் ஆனது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in