காஷ்மீரில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கப் பாதையை ஏப்.2-ல் திறந்து வைக்கிறார் மோடி

காஷ்மீரில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கப் பாதையை ஏப்.2-ல் திறந்து வைக்கிறார் மோடி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிக நீளமான சுரங்கப் பாதையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஜம்மு - நகர் தேசிய நெடுஞ்சாலையில் 286 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிப் பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கு ரூ.3,720 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச் சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்தச் சாலையின் ஒரு பகுதியாக நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையால் ஜம்முவுக்கும் நகருக்கும் இடையில் 30 கி.மீ. தூரம் குறையும். மொத்தம் 9.2 கி.மீ. நீளத்துக்கு இருவழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காஷ்மீர் மாநிலத்தில் செனானி நஷ்ரி இடையே கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதையை ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்’’ என்றார். அன்றைய தினம் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார்.

இந்தச் சுரங்கப் பாதை 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுரங்கப் பாதையில் காற்றோட்டம், தீ தடுப்பு, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in