Last Updated : 25 Jul, 2016 10:36 AM

 

Published : 25 Jul 2016 10:36 AM
Last Updated : 25 Jul 2016 10:36 AM

ஐ.நா.வில் சீர்திருத்தங்கள் செய்ய சசி தரூர் எம்.பி. வலியுறுத்தல்

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசர அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தா வில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:

அமெரிக்க முன்னாள் அதிபர் ஹாரி ட்ரூமேன் கூறியபோது, ஐ.நா. சபையை வலுப்படுத்த தவறி னால் இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களுக்கு நாம் துரோகம் இழைத்துவிட்டவர்களாகி விடுவோம் என்று தெரிவித்தார்.

சர்வதேச தீவிரவாதம், பேரழிவு ஆயுதங்கள் உலகத்தை அச் சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க ஐ.நா. சபை ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளராக சசி தரூர் பணியாற்றியுள்ளார். 2007-ம் ஆண்டில் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி யிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x