Published : 26 Dec 2013 01:35 PM
Last Updated : 26 Dec 2013 01:35 PM

ஆந்திராவில் ரப்பர் தொழிற்சாலையில் தீ: 4 பேர் பலி

ஆந்திரம் மாநிலத்தில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தொழிலாளிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரம் மாநிலம் ககன்பாத் பகுதியில் தனியார் ரப்பர் தொழிற்சாலை உள்ளது. அங்கு, ஒரு அறையில் இருந்த, திரவ ரசாயனம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.

இதனால் ரப்பர் உருகி பணியாட்கள் மேல் விழுந்தது. பணி முடித்து ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் உருகிய ரப்பர் விழுந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x