Published : 14 Jun 2017 10:09 AM
Last Updated : 14 Jun 2017 10:09 AM

ம.பி.யில் விவசாயிகள் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, வன் முறையை தூண்டியதாக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு மான்ட்சர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும் போலீஸா ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர்.

போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கடந்த 8-ம் தேதி கரேரா காவல் நிலையத்துக்கு வெளியே, கரேரா தொகுதி எம்எல்ஏ (காங்கிரஸ்) சகுந்தலா கதிக் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை விரட்டு வதற்காக அவர்கள் மீது போலீஸார் தண்ணீரைபே பீய்ச்சி அடித்தனர்.

அப்போது காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சீவ் திவாரிக்கும் சகுந்தலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு தீ வைக்குமாறு தனது ஆதரவாளர்களை சகுந்தலா கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, சகுந்தலா மீது வன்முறையைத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சகுந்தலாவை கைது செய்வதற்காக போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. தலைமறைவாக உள்ள சகுந்தலாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x