Last Updated : 24 Oct, 2014 10:44 AM

 

Published : 24 Oct 2014 10:44 AM
Last Updated : 24 Oct 2014 10:44 AM

மேற்குவங்க மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் பலி

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 11 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து மால்டா மருத்துவ கல்லூரியின் துணை முதல்வரும் கண்காணிப்பாளருமான எம்.ஏ.ரஷீத் கூறும்போது, “கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் 8 குழந்தைகளும் புதன்கிழமை 3 குழந்தைகளும் உயிரிழந்தன. குறைவான எடை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுவாசக் கோளாறு ஆகிய காரணங்களால் பிறந்து 30 நாட்களுக்குள்ளாகவே இந்தக் குழந்தைகள் உயிரிழந்தன” என்றார்.

மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவை உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச் சை பெற்ற பிறகு இங்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். இதே மருத்துவமனையில்தான் கடந்த ஆண்டும் பல குழந் தைகள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x