Last Updated : 13 Sep, 2016 10:37 AM

 

Published : 13 Sep 2016 10:37 AM
Last Updated : 13 Sep 2016 10:37 AM

கட்சி ஊர்வலத்தில் பங்கேற்க சென்றபோது மத்திய பெண் அமைச்சர் மீது தாக்குதல்: உத்தரப் பிரதேசத்தில் 158 பேர் மீது வழக்கு

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மற்றும் அப்னா தளம் எம்எல்ஏ ஆர்.கே.வர்மா உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்திய 158 பேர் மீது உத்தரப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய இணையமைச்சர் அனுபிரியா படேல், அப்னா தளம் கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் அனுபிரியா படேல், எம்எல்ஏ ஆர்.கே.வர்மா, அப்னா தளம் ஆதரவாளர்களுடன் கட்சி ஊர்வல நிகழ்ச்சிக்காக உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் ராணிகஞ்ச் பகுதி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, உள்ளூர் பிரமுகர் வினோத் துபே என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அனுபிரியா மற்றும் அவரின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதையடுத்து, ராணிகஞ்ச் காவல் துறையினர் வினோத் துபே மற்றும் 157-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“வினோத் துபே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். எனவே அவரது ஆதரவாளர்களுடன், அனுபிரியா படேல் மற்றும் அப்னாதளம் நிர்வாகிகள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டபோது இந்த மோதல் நிகழ்ந்துள்ளது” என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சர் அனுபிரியா படேல் கூறும்போது, “எங்கள் கட்சியின் அணிவகுப்புக்கு இடையூறு விளைவிப்பதற்காக இந்த திட்டமிட்ட சதி அரங்கேற்றப் பட்டுள்ளது. நான் புகார் தெரிவித்த பிறகும் எனக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர், காவல் கண் காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வர வில்லை. அமைச்சரின் கோரிக் கைக்கே இந்த நிலை எனில், சாதா ரண மக்களின் நிலையை யோசித் துப் பார்க்க வேண்டும்” என்றார்.

அனுபிரியா படேல் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த அப்னா தளம் தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x