Published : 26 Sep 2016 09:08 AM
Last Updated : 26 Sep 2016 09:08 AM
கோபர்டி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிக்கு கடும் தண்டனை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் மராத்தா இன மக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடத்தினர்.
கடந்த ஜூலை மாதம் கோப்ரடி யில் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத் தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை, மராத்தா இன மக் களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன் படுத்தப்படுவதை தடுக்க சட்டத் திருத்தம் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா இன மக்கள் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்தினர்.
புனேயில் லட்சக்கணக்கான மராத்தா மக்கள் மராத்தா கிரந்தி முக் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒன்று திரண்டு சுமார் 3 மணி நேரம் அமைதிப் பேரணியாக நடந்து சென்று, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்தப் பேரணியில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT