Published : 26 Apr 2017 09:43 AM
Last Updated : 26 Apr 2017 09:43 AM
நம் நாட்டில் பலமுறை இன அடிப் படையில் அவமதிக்கப்பட்டுள் ளேன் என்று மிசோரம் முதல்வர் லால் தன்ஹாலா கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று டெல்லியில் கூறியதாவது:
இன வெறுப்புணர்வு குற்றங் கள் நம் நாட்டில் நிலவும் மோசமான பிரச்சினை ஆகும். நானும் பல முறை இன அடிப்படையில் அவ மதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு நடந்துகொள்பவர்கள் தங்கள் நாட்டை பற்றியே அறிந்து கொள்ளாத முட்டாள் மனிதர்கள் ஆவர். 20 - 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில் ஒருவர் என்னிடம், “உங்களைப் பார்த்தால் இந்தியரை போல் தெரியவில்லை” என்றார். இதற்கு நான், “இந்தியன் என்றால் என்ன தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்றேன்.
இதுபோன்ற தேசிய தலைவர் கள் பலர் தங்கள் சொந்த நாட்டை பற்றிகூட அறியாதவர்களாக உள்ளனர். கல்வியறிவின்மை, தேசப்பற்றின்மை குறித்து இவர் கள் பேசுகின்றனர். அதேநேரம் தங்களைப் பற்றிய உயர்ந்த மனோ பாவத்தையும் தங்கள் பேச்சில் வெளிப்படுத்துகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை அவமதிப்பதும், மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதும் அப்பகுதியில் பிராந்திய உணர்வையும் பிரிவினைவாதத் தையும் ஏற்படுத்தும்.
இவ்வாறு லால் தன்ஹாலா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT