Published : 08 Feb 2017 03:23 PM
Last Updated : 08 Feb 2017 03:23 PM
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க, மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், "என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்" என்று அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது குற்றச்சாட்டினார்.
மேலும் ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழ்நிலையில் பரப்பரப்பு உண்டானது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாநிலங்களவை கூடியது, தமிழகத்தில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா உள்ளிட்டோர் அனுமதி கேட்டனர்.
ஆனால் இது தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து பி.ஜே.குரியன் கூறும்போது, "தமிழக மக்கள் இந்தச் சூழ்நிலையைக் கையாள்வார்கள். தமிழக மக்களுக்கு இது தொடர்பாக முடிவெடுக்கும் திறன் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT