Published : 16 Oct 2014 11:12 AM
Last Updated : 16 Oct 2014 11:12 AM
புயலால் பாதிக்கப்பட்ட விசாகப் பட்டினத்தில் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னைக்கு செல்ல ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது.
ஹுத் ஹுத் புயல் பாதிப்பால் விசாகப்பட்டினத்தை இணைக்கும் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என தெரிகிறது.
இந்நிலையில், விசாகப் பட்டினத்திலிருந்து வெளி மாநிலம் செல்லும் பயணிகள் வேறு வழியின்றி தனியார் பஸ்களை நாடுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, தனியார் பஸ் உரிமையாளர்கள் விமான கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ஒருவருக்கு ரூ.4,500, பெங்களூருக்கு ரூ.5,500, ஹைதரா பாத்துக்கு ரூ.4000 என பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT