Last Updated : 29 Jul, 2016 10:41 AM

 

Published : 29 Jul 2016 10:41 AM
Last Updated : 29 Jul 2016 10:41 AM

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நாடாளு மன்றத்தில் சுமூகமாக நிறை வேற்றுவது தொடர்பாக, எதிர்க் கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஜிஎஸ்டி மசோதா தொடர் பாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அரசு ஆலோ சனை நடத்தி வருகிறது” என்றார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர் களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனித் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் ஜெட்லி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, இருக்கையிலேயே அமர்ந்திருந்த பிரதமர் மோடி, ராம் கோபால் யாதவ் மற்றும் நீரஜ் சேகர் ஆகிய சமாஜ்வாடி உறுப்பினர்களுடன் ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜிஎஸ்டி மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திருத்தங்களுடன் புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x