ஆந்திராவில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை

ஆந்திராவில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை
Updated on
1 min read

ஆந்திர தலைநகர் அமராவதியில் 125 அடி உயர அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் அயனவலு-சாகநூரு இடையே 20 ஏக்கரில் ஸ்மிருதி வனம் கட்டப்பட உள்ளது. இதில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. இதற்காக ஆந்திர அரசு ரூ.97.64 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். இவ்விழாவில் அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம், மொவ் கிராமம் மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து மண் கொண்டு வந்து பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் புத்த மதத்தைச் சேர்ந்த 25 பிட்சுக்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in