Last Updated : 08 Aug, 2016 03:47 PM

 

Published : 08 Aug 2016 03:47 PM
Last Updated : 08 Aug 2016 03:47 PM

பஞ்சாப்: பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர் மீது வழக்கு பதிவு

பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதையடுத்து, பஞ்சாப் காவல்துறை பசு பாதுகாப்பு அமைப்பு (கவ் ரக்‌ஷா தளம்) தலைவர் சதீஷ் குமார் மீது, பசு பாதுகாப்பு என்று பொய்க்காரணம் கூறி மக்களைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிறப்பு காவல் கண்காணிப்பாளர் குர்மீத் சவுகான், "பசு பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர்கள் கொடூரமான முறையில் மக்களைத் தாக்கியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதீஷ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 382 (மரணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது), 384 (மிரட்டி பணம் பறிப்பது), 341 மற்றும் 148, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஆனால் சதீஷ் குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x