Last Updated : 22 Aug, 2016 09:22 AM

 

Published : 22 Aug 2016 09:22 AM
Last Updated : 22 Aug 2016 09:22 AM

சத்தீஸ்கரில் நக்ஸலைட் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் எர்ராபர் காவல் நிலையத்துக்கு அருகே, சுமார் 200 மீட்டர் தொலைவில் வாரச் சந்தை நேற்று கூடியது. அங்கு பாதுகாப்புக்கு துணை ராணுவப் படையினர் வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் நக்ஸலைட்டுகள் புதைத்து வைத் திருந்த குண்டுகள் வெடித்ததில், சிஆர்பிஎப் தலைமைக் காவலர் திலிப்குமார் படுகாயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்ஸலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் சுட்டனர்.

சிறிது நேர சண்டைக்குப் பின், நக்ஸலைட்டுகள் அங்கிருந்து தப்பியோடினர். சண்டை நடந்த இடத்தில் சோதனையிட்டபோது, நக்ஸலைட் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x