Last Updated : 19 Jun, 2016 09:20 AM

 

Published : 19 Jun 2016 09:20 AM
Last Updated : 19 Jun 2016 09:20 AM

சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவி அச்சுறுத்தும் மத்திய அரசு: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது என்றும் தனக்கு எதிரானவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஏவி அச்சுறுத்தி வருவதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய மூன்று மத்திய முகமைகளையும் ஏவி, பாஜக ஆளாத மாநிலங்களில் தங்களுக்கு எதிராக செயல்படுவோரை மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது.

‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற பெயரில் நாட்டை பாஜக விற்று வருகிறது. நாட்டின் மதிப்பு மற்றும் கொள்கைகள் மீது, அக்கட்சிக்கும் துளியும் அக்கறையில்லை.

காங். மீது புகார்

மேற்குவங்கத்தில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங் களையும் தங்களுக்கு சாதகமாக பாஜகவினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களது பொய் பிரச்சாரங்களை திரிணமூல் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தோலுரித்து காட்ட வேண்டும். ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் காங்கிரஸோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டோ இதை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துவதில்லை.

மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக அவ்விரு கட்சிகளும் தங்களது கொள்கைகளை தியாகம் செய்துவிட்டன. சில ஊடகங்களும் அக்கட்சிகளுக்கு கைகூலிகளாக செயல்படுகின் றன. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x