Last Updated : 30 Mar, 2014 02:41 PM

 

Published : 30 Mar 2014 02:41 PM
Last Updated : 30 Mar 2014 02:41 PM

எம்.பி. மீதான பலாத்கார புகாரை வாபஸ் பெற மனைவியை துன்புறுத்திய கணவன்

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி தனஞ்செய் சிங் மீதான பலாத்கார புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மனைவியை அவரது கணவர் அடித்து துன்புறுத் தியுள்ளார். இதுகுறித்து அவர் மீது சனிக்கிழமை கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் ஜோன்பூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் சிங். இவர் தன்னிடம் உதவி கேட்டு வந்த ரயில்வேயில் பணியாற்றும் 42 வயது பெண்ணை கடந்த 2005 முதல் 2009 வரை துப்பாக்கி முனையில் பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார் செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இதன் சாட்சிகளின் விசாரணை ஏப்ரல் 1-ல் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், மண வாழ்க்கை யில் பிரிந்து தனியாக டெல்லி மயூர் விஹார் பகுதியில் வசிப்ப வரை தேடி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர். அப்போது, தனஞ்செய் மீதான புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் படுகா யம் அடைந்த அந்தப் பெண், அரு கிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனஞ்செய் மற்றும் பல் மருத்துவம் படித்த அவரது மனைவி ஜக்ரிதி மீது ஒரு கொலை வழக்கும் பதிவாகி உள்ளது. கடந்த வருடம் நவம்பர் 5-ல் தம் வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது ராக்கி பந்த்ரா என்ற மேற்குவங்க பெண்ணை அடித்து, துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருவரும் டெல்லியின் திஹார் சிறையில் தள்ளப்பட்டனர்.

இதில், தனஞ்செய் மட்டும் பிப்ரவரி 22-ல் டெல்லி உயர் நீதிமன்ற மேல் முறையீட்டில் இரு மாதங்களுக்கு மட்டும் என ஜாமீன் பெற்று சிறைக்கு வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x