Published : 06 Oct 2014 02:57 PM
Last Updated : 06 Oct 2014 02:57 PM
எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக, பஞ்சாபில் வாகா எல்லையில், ஈகைத் திருநாளையொட்டி இனிப்புகள் பறிமாற்றம் செய்யப்படும் வழக்கமான நிகழ்வு நிறுத்திக் கொள்ளப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் - பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின்போது, ஈகைத் திருநாளுக்கு இனிப்புகளை பெறுவதற்கான நேரம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் ஈகைத் திருநாளில் இனிப்புகள் பறிமாற்றம் செய்யப்படும் வழக்கமான நிகழ்வு நிறுத்திக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
நல்லெண்ண அடிப்படையில், தீபாவளி, சுதந்திர தினம், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் வாகா எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் இனிப்புகள் பரிமாறிக் கொள்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT