Last Updated : 28 Oct, 2015 09:47 AM

 

Published : 28 Oct 2015 09:47 AM
Last Updated : 28 Oct 2015 09:47 AM

ஷாருக்கானுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பங்கு விற்பனை தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற் கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக 2011-ம் ஆண்டில் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை அப்போதே விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மொரீஷியல் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேத்தா நிறுவனத்தின் சீ ஐலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்டுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 50 லட்சம் பங்குகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் கடந்த மே மாதம் ஷாருக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் ஆறு மாத இடைவெளியில் இப்போது மீண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x