Last Updated : 04 Oct, 2014 09:35 AM

 

Published : 04 Oct 2014 09:35 AM
Last Updated : 04 Oct 2014 09:35 AM

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை யினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று கடும் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம், சார்சூ என்ற பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த தளபதிகள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஒருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

மேலும் சில தீவிரவாதிகள் அப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை ராணுவ வீரர்களும் போலீஸாரும் இணைந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x