Published : 28 Sep 2016 09:28 AM
Last Updated : 28 Sep 2016 09:28 AM
கிழக்கு உ.பி.யில் இருந்து டெல்லி நோக்கி ராகுல் காந்தி கிசான் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் லக்கிம்பூர் கேரி நகரில் நேற்று மக்களிடையே அவர் பேசும்போது, “சாதாரண மக்கள்தான் மோடியை பிரதமராக தேர்வு செய்தார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு விவசாயிகள், தலித்துகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை மோடி மறந்துவிட்டார். 15- 20 பேருக்காக மட்டுமே அவர் பணியாற்றுகிறார். பிற மக்களின் நலன்களை அவர் மறந்து விட்டார்.
மோடி அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிராக காங்கிரஸ் போராடும். ஒவ்வொரு இந்தியனுக்காகவும் அவர் பணியாற்ற அழுத்தம் கொடுக்கும்.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவும், மின்கட்டணத்தைக் குறைக்கவும், வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவும் மோடி அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே எனது யாத்திரையின் நோக்கம்” என் றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT