Published : 07 Oct 2014 11:43 AM
Last Updated : 07 Oct 2014 11:43 AM
சந்திர கிரகணம் நாளை நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சந்திர கிரகணம் நாளை மாலை 4.45-க்கு தொடங்கி இரவு 7.05 மணி வரை நீடிக்கும். இதனால் ஆகம விதிகளின்படி முன்கூட்டியே திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நேற்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சந்திர கிரகணம் காரணமாக, புதன்கிழமை காலை 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இரவு 10.30 மணியிலிருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
முன்னதாக புதன்கிழமை காலை 6.30 மணியிலிருந்து காலை 9.30 மணி வரை 3 மணி நேரம் சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கிரகணம் காரணமாக புதன்கிழமை நடைபெறும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT