Published : 25 Jan 2017 08:03 AM
Last Updated : 25 Jan 2017 08:03 AM

மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு

லஞ்சம் அல்லது இதர குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு அது தொடர்பான மேல்முறையீட்டு மனு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் பதவி உயர்வு கிடைக்கும்.

இது பற்றிய புதிய சட்டவிதிகளை மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் வகுத்துள்ளது.

லஞ்சம் அல்லது இதர குற்றப் புகார்கள் தொடர்பான வழக்கில் அரசு ஊழியர் விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டாலோ அல்லது மேல்முறையீடு செய்ய திட்டமிட்டாலோ என்ன செய்வது கேட்டு என மனுக்கள் வருவதால் இந்த விளக் கத்தை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x