மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்படாது: மொய்லி

மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்படாது: மொய்லி
Updated on
1 min read

மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 9-ல் இருந்து 12-ஆக உயர்த்தப்பட வாய்ப்பில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரி வாயு சிலிண்டர் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்பை 12 ஆக உயர்த்தும்படி கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, ஆண்டுக்கு 9 மானிய விலை சிலிண்டர் வழங்கப்படுவதால் 90% வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர், 10 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மானியம் கிடைப்பதில்லை. எனவே மத்திய அரசின் இந்த முடிவை மக்கள் வரவேற்பார்கள் என்றார்.

மானிய விலை சிலிண்டர்களுக்கான உச்சவரம்பை 12 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in