Published : 27 Oct 2014 12:21 PM
Last Updated : 27 Oct 2014 12:21 PM

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ திடீர் மறைவு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட பாஜக எம்.எல்.ஏ. கோவிந்த எம். ரதோட் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் நான்டெட் மாவட்டம் முத்கேத் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த எம். ரதோட், 73,291 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட இத்தொகுதியில் பாஜக வேட்பாளரின் வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். பயணத்தின்போதே அவர் உயிர் பிரிந்துள்ளது என பாஜக செய்தித் தொடர்பாளர் மாதவ் பந்தாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x