Published : 09 Dec 2013 11:24 PM
Last Updated : 09 Dec 2013 11:24 PM

ஃபேஸ்புக்கில் சச்சின், மங்கள்யானை முந்தினார் மோடி

சமூக வலைத்தளமான முகநூலில், நடப்பு ஆண்டு சச்சின் டெண்டுல்கர், மங்கள்யான் திட்டத்தைக் காட்டிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது, பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியைப் பற்றிதான் என ஃபேஸ்புக் நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.



இந்தியப் போக்கு (ட்ரெண்ட்) 2013-ன்படி ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன், இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி, ஃபேஸ்புக்கில் அதிகம் மென்ஷன் செய்யப்பட்டவர் என்ற சிறப்பைத் தட்டிச் சென்றுள்ளார் மோடி.

ஃபேஸ்புக்கில் இந்தியர்களால் மோடிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர், ஐபோன் 5, ரகுராம் ராஜன் மற்றும் மங்கள்யான் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதைய செய்திகள், அரசியல் கட்சிகள், கிரிக்கெட் ஆகியவை குறித்தே ஃபேஸ்புக்கில் தினமும் கருத்துகள் குவிக்கப்பட்டு வருதாக ஃபேஸ்புக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x