Last Updated : 04 Jan, 2016 07:46 AM

 

Published : 04 Jan 2016 07:46 AM
Last Updated : 04 Jan 2016 07:46 AM

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 16,000 வீடுகள்: இந்திய அரசு கட்டியது

வடகிழக்கு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்தவர் களுக்கு கடந்த 2015-ம் ஆண்டில் 16,000 வீடுகளை இந்திய அரசு கட்டியுள்ளது.

இலங்கையில், ரூ.1,500 கோடி மதிப்பில் 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இதுவரை 43,800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மாதங்களில் 2,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். மத்திய இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக 4,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

இலங்கை அரசு மற்றும் இதர அமைப்புகளின் நெருங்கிய ஆலோ சனையின்பேரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x