Published : 01 Nov 2013 08:36 AM
Last Updated : 01 Nov 2013 08:36 AM

நரேந்திரமோடி நாளை பாட்னா செல்கிறார்: பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி நாளை (நவம்பர் 2ம் தேதி) பாட்னா செல்கிறார். அங்கு கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

கடந்த 27- ஆம் தேதியன்று பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற பேரணியின் போது 7 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர், 83 பேர் காயமடைந்தனர்.

அக்.27-ல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர், மோடி பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் . இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

குறிப்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில், நரேந்திரமோடி நவம்பர் நாளை பாட்னா செல்கிறார்.

நரேந்திர மோடி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x