Last Updated : 26 Jan, 2017 09:43 AM

 

Published : 26 Jan 2017 09:43 AM
Last Updated : 26 Jan 2017 09:43 AM

உத்தராகண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா

உத்தராகண்டில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத் தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

உத்தராகண்ட் சட்டப்பேர வைக்கு வரும் பிப்ரவரி 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர் உட்பட 40 நட்சத்திர பிரச்சாரகர்கள் பங்கேற்பார்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மதுரா மக்களவை தொகுதி எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவி சங்கர் பிரசாத், ராதா மோகன் சிங், பாஜக தேசிய செயலாளர் அருண் சிங், மாநில முன்னாள் முதல்வர்கள் பி.சி.கந்தூரி, பகத்சிங் கோஷியாரி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங் மற்றும் விஜய பகுகுணா உள் ளிட்டோரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

முதல்வர் வேட்பு மனு தாக்கல்

உத்தராகண்ட் மாநிலத்தின் கிச்சா தொகுதியில் போட்டியிட முதல்வர் ஹரிஷ் ராவத் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தராகண்ட் சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட ஹரிஷ் ராவத் முடிவு செய்துள்ளார். இந் நிலையில் உதம்சிங் நகர் மாவட் டத்தில் உள்ள கிச்சா தொகுதியில், உதவி தேர்தல் அதிகாரி நரேஷ் துர்காபாலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இம்முறை ஹரித்வார் ஊரக தொகுதியிலும் போட்டியிட ஹரிஷ் ராவத் முடிவு செய்துள் ளார். ஆனால் இத்தொகுதியில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x